புதுக்குடியிருப்பில் மிளகாய் தூள் வீசி சங்கிலி அறுத்த திருடர்கள்.

மிளகாய்த் தூள்வீசிவிட்டு திருடர்கள் தங்கச்சங்கிலியினை அபகரித்துக்கொண்டு சென்ற சம்பவம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரப்பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர் தினநிகழ்விற்கு சென்று வந்த 7 ஆம் வகுப்பு மாணவி மீது மிளகாய்த் தூள்வீசிவிட்டு திருடர்கள் தங்கச்சங்கிலியினை அபகரித்துக்கொண்டு சென்றுள்ளார்கள்.

 

3f92d04457a7f6d1067016fa70a5c014_1506161242-b

குறித்த மாணவி உள்வீதி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருக்கையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த  மர்ம நபர்களால் இவ்வாறு தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் மாணவி மீது மிளகாய்த் தூள் வீசப்பட, மற்றைய மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சங்கிலியினை அபகரித்து சென்றுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பில் முன்னர் இரவு வேளைகளில் இவ்வாறான கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றபோது பின்னர் இளைஞர் விழிப்பு குழு அமைக்கப்பட்டதாகவும் தற்போது குறித்த கொள்ளை சம்பவம் பகல் வேளையில் இடம்பெறுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.