இரத்தினபுரி மாவட்டத்திற்கு அபாய எச்சரிக்கை!! மக்களே அவதானம்!

இரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Landslide-yaalaruvi-1

தற்போது நிலவும் மழையுடன்கூடிய காலநிலை காரணமாக சில நேரங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இரத்தினபுரி மாவட்டம் கரதான வடக்கு, கரதான மேற்கு, களடுவாவ மேற்கு, மொகொட, தெய்யாகல, விலேகொட, போபெத்த, அஸ்ககுல, மாஹர, தலாபிட்டிய மற்றும் எராபொல முதலான கிராமங்களிற்கே இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் சில தினங்களிலும்  நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் மற்றும் காலி மாத்தறை மாவட்டங்களுக்கும் 75 மில்லீமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என அதன் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது