மாணவிகள் இருவர் இரு இளைஞர்கள் உட்பட ,விடுதியின் உரிமையாளர் கைது

நீர்கொழும்பில் பாடசாலை சீருடை அணிந்த நிலையில், மாணவிகள் இருவர் இரு இளைஞர்களுடன் விடுதியில் தங்கியிருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16

நீர்கொழும்பு பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 17 வயது நிரம்பிய மாணவிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் 21 வயதுடைய இளைஞர்கள் இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்கள் தங்கியிருந்த விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை பகுதியை சேர்ந்த குறித்த விடுதியின் உரிமையாளர் 3 ஆயிரம் ரூபாவிற்கு அறைகளை வாடகைக்கு விடுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் சட்டவிரோதமாகவே விடுதியை நடத்தி வந்துள்ளார் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பாடசாலை சீருடையுடன் விடுதியில் தங்குவதற்கு அனுமதித்தமை பாரிய குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, நீர்கொழும்பு காவல்துறை மற்றும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதேவேளை கைது செய்யப்பட்ட மாணவிகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.