அண்ணன் கொலை செய்யப்பட்டதை அறிந்த சகோதரர் ஒருவர் தற்கொலை : சம்பவம் யாழ் மீசாலை பகுதியில்

அண்ணன் கொலை செய்யப்பட்டதை அறிந்த சகோதரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாழ் மீசாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் வசித்து வந்த 34 வயதுடைய யசோதரன் என்பவர் கடந்த மாதம் 25 ஆம் திகதி மதுபோதையில் தனது மனைவியுடன் தகராற்றில் ஈடுபட்டு மனைவியை தாக்கியுள்ளார்.

images (16)

மனைவி வைத்தியசாலை சென்ற பின்னர் தனியாக அன்று இரவு வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரின் நண்பர்கள் இருவர் அவரை தாக்கி விட்டு மோட்டார் சைக்கிளில் ஏற்றி செல்வதை அயலவர்கள் கண்டுள்ளனர்.

படுகாயங்களுடன் குறித்த நபரை வைத்திய சாலையில் சேர்த்து விட்டு அந்த இரு நபர்களும் சென்று விட்டனர்.

ஆட்களை அடையாளம் காட்டியும் பொலிஸார் இது தொடர்பில் எவரையும் கைது செய்யவில்லை.

இந்த நிலையில் மேலதிக சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்று  யாழ் போதனா வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளார்.

இதை அறிந்த அவருடைய சகோதரரான 32 வயதுடை சுதாகரன் என்பவர் மீசாலையில் உள்ள அவரது வீட்டில் இன்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.