இலங்கையை சேர்ந்தவர் தனது வயிற்றுக்கு செய்த அநியாயம் !!

இந்தியாவின் விசாகபட்டினம் விமான நிலையத்தில் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நபரின் நடத்தையானது சந்தேகத்தைத் தூண்டும் விதத்தில் அமைந்திருந்தமையால் அந்நாட்டு சுங்கப் பிரிவினர் தீவிரமாகக் கண்காணித்துள்ளனர். பின்னர் அவரைச் சோதனையிட்டபோது அவர் செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்தனர்.

ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர் தனது வயிற்றுக்கு செய்த அநியாயம்; இந்தியாவில் அதிர்ச்சி!

குறித்த நபர் தனது வயிற்றில் மிகவும் நூதனமான முறையில் தங்கத்தினை மறைத்து வைத்து கடத்தியுள்ளார்.

குறித்த நபர், முதலில் கொக்கெய்ன் போதைப்பொருள் கடத்தியிருக்கலாம் என்றே சந்தேகிக்கப்பட்டது. ஆனாலும் தொடர் சோதனையிலும் விசாரணையிலும் அவர் வயிற்றினுள் தங்கம் மறைத்துவந்தமை கண்டறியப்பட்டது.

இலகுவில் யாராலுமே கண்டுபிடிக்கமுடியாத நூதனத்தைக் கையாண்டு தனது வயிற்றினுள் தங்கத்தினைக் கடத்தியமையால் சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ந்துபோயினர்.

அதிகாரிகள் உடனடியாக அவரைக் கைது செய்யப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். கைதான நபர் யார்; அவர் ஸ்ரீலங்காவின் எப்பாகத்தைச் சேர்ந்தவரென்ற மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.