கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவை கதற வைத்த ரோஹித் சர்மா !!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி 3 மூன்று போட்டியிலும், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 125  ரன்களும், ரஹானே 61 ரன்களும் எடுத்து அபார துவக்கம் கொடுத்தனர்.

அடுத்தாகவந்த கோஹ்லி 39 ரன்களும், கேதர் ஜாதவ்  * எடுத்து கைகொடுத்தன் மூலம் 42 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் 7 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.