யாழில் பாமசிக்கு மருந்து வாங்க சென்ற மூதாட்டிக்கு நடந்தது என்ன?

கண் சிகிச்சை பெற்ற மூதாட்டி ஒருவர் குறித்த மருந்தகத்திற்கு  மருந்துவாங்க சென்றுள்ளனர்

ஆனால் அங்கு சென்ற மூதாட்டிக்கு புண்ணுக்கு வழங்கும் மருந்தினை வழங்கியுள்ளனர்.

Eye_Drops_Could_Treat

இம் மருந்தை கொண்டுவந்த மூதாட்டி கண்ணுக்குள் விடும்படி தனது மகளிடம் கொடுத்தபோது மகள் மருந்து மாறுப்பட்டுள்ள சம்பவத்தை அவதானித்துள்ளார்.

இச் சம்பவத்தினால் முதியவரின் மகளின் திறமை காரணமாக மூதாட்டி காப்பாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல பல மருந்தகங்களில் தினம் தினம் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

மருந்தக உரிமையை பெற்றவர் தலைமையிலேயே மருந்தகங்கள் நடத்தப்பட வேண்டும்.

ஆனால் வெறும் பணத்திற்காக சில மருத்துவ துறைசார்ந்தோர் இவற்றை விற்பதால் மருந்துபற்றிய பூரண அறிவின்றி பணம் சம்பாதிக்கும் ஒரேநோக்கினில் அப்பாவிகளை வேலைக்கமர்த்தி இதுபேல சாதரண மக்களின் உயிர்களுடன் விளையாடுகின்றது ஒருகும்பல்.,