ஒரு தலை­மு­றை­யையே இலங்கைக் கிரிக்கெட் இழந்­து­விட்­டது ஆதங்­கத்­துடன் லசித் மலிங்க

ஒரு தலை­மு­றை­யையே இலங்கைக் கிரிக்கெட் இழந்­து­விட்­டது என்று லசித் மலிங்க ஆதங்­கத்­துடன் தெரி­வித்­துள்ளார். அதேபோல் மக்­களின் விருப்­பத்­திற்கு புதிய இளம் வீரர்­களை அணியில் சேர்த்து, சேர்­த்த­வர்கள் நல்ல பெயரைப் பெற்­றுக்­கொண்­டார்கள். அணி வீழ்ச்­சியைக் கண்­டு­விட்­டது என்றும் அவர் தனது ஆதங்­கத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

Image result for லசித் மலிங்க

இலங்கைக் கிரிக்கெட் அணி அண்மைக் கால­மாக கண்­டு­வரும் தொடர் தோல்­வி­களால் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­கி­வ­ரு­கின்­றது. அதேபோல் விளை­யாட்­டுத்­துறை அமைச்­சரும் கண்­டு­கொள்­ளாமல் இருக்­கிறார் என்றும் விமர்­ச­னங்கள் எழுந்­தன.

இந்­நி­லையில் கிரிக்­கெட்டை மீட்­டெ­டுப்­ப­தற்­கான விசேட செய­லர்வை நடத்த விளை­யாட்­டுத்­துறை அமைச்சு முடி­வு­செய்­தது.

அதன்­படி விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தலை­மையில் கிரிக்கெட் மீட்­டெக்கும் விசேட செயற்றிட்ட சம்­மே­ளனம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொழும்பு வோர்ட்டஸ் எட்ஜ் ஹோட்­டலில் நடை­பெற்­றது.

இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கும்­போதே இலங்கை அணியின் நட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சாளர் லசித் மலிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில், இலங்கைக் கிரிக்­கெட்­டி­லி­ருந்து ஒரு தலை­மு­றை­யையே நீக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. அதில் சிக்­கக்­கொண்­ட­வர்­கள்தான் ஜெஹான் முபாரக், திலின கண்­டம்பே, மலிந்த வர்­ண­புர, சாமர சில்வா, கௌஷால் வீர­ரத்ன போன்ற வீரர்கள். இவர்கள் மட்­டு­மல்ல, இன்னும் பலர் இருக்­கி­றார்கள்.

இப்­ப­டி­யொரு தலை­முறை தேசிய அணிக்கு வரு­வ­தற்கு கழக மட்­டத்தில் 8 அல்­லது 9 வரு­டங்கள் விளை­யா­டி­ய­வர்கள்.

அப்­படி பல போராட்­டங்­க­ளுக்குப் பிறகு தேசிய அணிக்கு வந்து சர்­வ­தேச அளவில் 2 வரு­டங்கள் விளை­யாடிக் கொண்­டி­ருக்­கும்­போது ஒரு சில கார­ணங்­களால் அவர்­களை நீக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

அந்த நேரத்தில் நாம் சரி­யான நடை­மு­றையை கையா­ள­வில்லை. அவர்­களின் திற­மை­கள் மங்­கி­யதால் நீக்­கப்­பட்­டார்கள் என்றால், அவர்­களின் திறமை ஏன் குறைந்­தது என்­பதை ஆராய்ந்து அதற்­கேற்ப அவர்­க­ளுக்கு பயிற்­சி­ய­ளித்து அவர்­களை திற­மை­யான வீரர்­க­ளாக உரு­வாக்­கி­யி­ருக்­க­வேண்டும்.

அவர்­களின் அனு­ப­வத்­தோடு பயிற்­சி­யா­ளர்கள் அதை இலகுவாக செய்திருக்கலாம். ஆனால் அதை யாரும் செய்யவில்லை.

வெளியிலிருந்து வரும் கருத்துக்களுக்கும், மக்களின் கருத்துக்களுக்கும் செவிசாய்த்து இளையவர்களை அணிக்கு கொண்டுவந்து விளையாடவிட்டு தாங்கள் பிரகாசித்தார்களே தவிர இந்த வீரர்களை வளர்த்தெடுத்து அணியை பலப்படுத்த நினைக்க வில்லை என்றும் தெரிவித்துள்ளார்.