உறங்கிக் கொண்டிருந்த 7 நாட்களான சிசுவை நாய் கடித்துக் கொன்றது

பிறந்து ஏழு நாட்கள் கொண்ட சிசு  அயல் வீட்டின் நாய் கடித்­ததில் உயி­ரி­ழந்த சம்­பவம் ஒன்று பதி­வா­கி­யுள்­ளது. ஹப­ரணை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நாமல்­புர  ஆசி­ரி­கம எனும் இடத்தில் இந்த சம்­பவம் நேற்று முன்­தினம் இரவு  இடம்­பெற்­றுள்­ளது. நாயின் கடியால் தலையில் பலத்த காயங்­க­ளுக்கு உள்­ளான  சிசு வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்ட போதும் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்­ளது.
babyஇந்த சம்­பவம் தொடர்பில் மேலும்  தெரிய வரு­வ­தா­வது, நாமல்­புர – ஆசி­ரி­க­மவைச் சேர்ந்த 24 வய­தான தாய் ஒருவர் தனது மூன்­றா­வது சிசுவை நேற்று முன்­தி­ன­மி­ரவு  உறங்க வைத்­துள்ளார். ஏற்­க­னவே  அந்த தாய்க்கு 6, 2 வயது நிரம்­பிய இரு மகள்மார்  உள்ள நிலையில் மூன்­றா­வது பிள்­ளை­யான குறித்த சிசிவை வீட்டின் நிலத்தில் விரிப்­பொன்றில் உறங்கச்  செய்­துள்ளார்.
பின்னர் சிசுவை நுளம்­பி­ட­மி­ருந்து பாது­காக்க நுளம்பு வலை­யையும் விரித்­துள்ள அந்த தாய்  பின்னர் இரவு நேர உணவு தயா­ரிக்கும் பணி­களில் ஈடு­பட்­டுள்ளார். இதன்­போது வீட்­டுக்குள் வந்­துள்ள அயல் வீட்டில் உள்ள நாய் சிசுவை கடித்து குத­றி­யுள்­ளது.
உட­ன­டி­யாக சிசுவின் அழு குரல் கேட்டு தாய் ஓடி வந்­துள்ள போது நாய் சிசுவை கெள­வு­வதை கண்டு  அத­னி­ட­மி­ருந்து சிசுவை மீட்டு வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் சென்­றுள்ளார்.
ஹப­ரணை வைத்­தி­ய­சா­லையில் சிசுவை பரி­சோ­தித்த மருத்­து­வர்கள்  தலையில் பலத்த காயம் காணப்­பட்­டதால் உட­ன­டி­யாக தம்­புள்ளை வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றி­யுள்­ளனர்.

எனினும் தம்­புள்ளை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பல­னின்றி குழந்தை உயி­ரி­ழந்­துள்­ளது.­தி­ய­சா­லைக்கு மாற்றியுள்ளனர். எனினும் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.