உலகை ஆண்ட தமிழனின் அதிசயம்

தன் மனைவியின் துயரால் ஷாஜகான் கட்டிய பளிங்கு மாளிகை தான் தாஜ்மஹால். மிகப்பெரிய ஓர் அதிசயமாக அதனை இன்று உலகமே கொண்டாடுகிறது. உன்னதமான அன்பின் அடையாளமாக அதனை இந்தப் பூமியின் மாந்தர்கள் நோக்குகின்றனர். இந்திய மரபுரிமைச் சொத்தாக தாஜ்மஹால் இன்று பாதுகாக்கப்பட்டுவருகிறது.

ஆனால் தாயின் பிரிவைத் தாங்காமல் அவளுக்காக கோவில் கட்டியவர்களென்றால் அது நம் தமிழர்கள் தான். தாயைத் தெய்வமாகக் கருதி அவள் இருந்த வீட்டையே கோவிலாகக் கருதும் பண்பாடு கொண்டவர்கள் தமிழர்கள். இந்த வழியில் தலை சிறந்த ஒரு பேரரசனாக இருந்தவனே நம் கங்கை கொண்ட சோழனாம் இராஜேந்திர சோழன்.

தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த தன் சிற்றன்னையான பஞ்சவன் மாதேவியின் பிரிவைத் தாங்கமுடியாமல் இராசேந்திரசோழன் ஒரு கோவில் கட்டுவித்தான். அதுதான் பட்டீஸ்வரம் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோவில்.

ஷாஜகானின் தாஜ்மஹாலைவிட உலக அதிசயமிக்க ஒரு தமிழனின் கோவில் இருப்பது தெரியுமா!

“பட்டீஸ்வரம்” தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம். இந்த ஊரின் பெயர் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும், இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை நகரான “பழையாறை” செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மசூதி, அப்படியே இன்னும் நடந்தால் ஒரு சிமெண்ட் சாலைப் பிரிவு. அங்கே தான் பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரமாண்டு அற்புதம்!

தஞ்சைப் பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் மனைவி தான் இந்த “பஞ்சவன் மாதேவி”, தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த சிற்றன்னையின் பிரிவைத் தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான் கங்கை முதல் கடாரம் வரை வென்ற “ராஜேந்திர சோழன்”. உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும், அதுவும் அதை ஒரு தமிழ் மன்னன் கட்டியிருக்கிறான் என்பது நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம்.

ஷாஜகானின் தாஜ்மஹாலைவிட உலக அதிசயமிக்க ஒரு தமிழனின் கோவில் இருப்பது தெரியுமா!

தன்னுடைய மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் அவளின் நினைவாக எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை இந்த உலகமே கொண்டாடுகிறது, அதற்காக தாஜ் மஹாலை இங்கே குறை கூற வில்லை, அதுவும் பாசத்தின் வெளிப்பாடு தான், ஆனால் தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா? குறைந்த பட்சம் எத்தனை தமிழர்களுக்கு தெரியும்? பளிங்குக்கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமாக கணக்கிடப்படுமா? வேதனை!

இந்த பட்டீஸ்வரத்தின்அருகில் தான் சோழர்களின் மாளிகை இருந்தது, ராஜ ராஜன் தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தன் கடைசிக் காலத்தை இங்கு தான் கழித்தார், தன்னுடைய மனைவியின் பிரிவைத் தாங்காமல் அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இன்றைக்கும் அந்த ஊரின் பெயர் “சோழன் மாளிகை”. கேட்பாரற்று இடிந்து கிடந்த இந்த கோயிலை சில வருடங்களுக்கு முன் தான் புதுப்பித்து இருக்கிறார்கள்.

ஷாஜகானின் தாஜ்மஹாலைவிட உலக அதிசயமிக்க ஒரு தமிழனின் கோவில் இருப்பது தெரியுமா!

பஞ்சவன்மாதேவி எப்பேர்பட்ட சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த பெண்மணியாக இருந்தாள் என்பதற்கு இராசேந்திரன் அமைத்த கோவிலே சாட்சி. தன் சொந்த அன்னை அல்லாத ஒரு பெண்ணுக்கு பள்ளிப்படை அமைத்த ராஜேந்திர சோழர் எவ்வளவு மேலானவர் என்பட்து புலனாகிறதல்லவா?

தனது சிற்றன்னையின் மேல் எத்தனை அன்பு இருந்தால் இந்த எண்ணம் அவருக்கு தோன்றி இருக்கும். இது இந்த மண்ணில் வாழ்ந்த மகத்தான ஒரு பெண்ணின் நினைவிடம் மட்டும் அல்ல, உண்மையான தாய் பாசத்தால் தனயன் எழுப்பிய புனித தலம்.

இப்பேர்ப்பட்ட ஒரு வரலாற்று அற்புதம் உலகத்தால் போற்றப்படவேண்டுமல்லவா?

ஷாஜகானின் தாஜ்மஹாலைவிட உலக அதிசயமிக்க ஒரு தமிழனின் கோவில் இருப்பது தெரியுமா!