யாழ்-சாவகச்சேரியில் வாள்வெட்டு- மூவர் படுகாயம்!

9bf31c7ff062936a96d3c8bd1f8f2ff3_1495534969-bயாழ்ப்பாணம் சாவகச்சேரி கிராம்புவில் பகுதியில் வீடு ஒன்றில் திருடர்கள் நுழைந்த திருடர்கள் மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு 8:40 மணியளவிலும் வீட்டில் திருடர்கள் நுழைந்ததை அவதானித்த வீட்டின் உரிமையாளர் திருடன் திருடன் என கத்தியபோது அயல்வீட்டுக்கார் அங்கு விரைந்துள்ளனர்.

இந்நிலையில் ஓடிவந்த அயல் வீட்டுக்காரர் மீது வாள்களால் சரமாரியாக வெட்டியதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் கிராம்புவில் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய பரமேஸ்வரன் சுஜிவன், 27 வயதான பரமேஸ்வரன் சுஜித்தா, 30 வயதான ஜெயரத்தினம் சிறிராஜ், ஆகியோர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பரமேஸ்வரன் சுஜித்தா மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.