வெலிக்கடை சிறைச்சாலையில் கொலை

வெலிக்கடை சிறைச்சாலையில் கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக் கைதியினால் மேற்கொள்ளப்பட்ட குற்றத்திற்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதற்காக மனநோயினால் பாதிக்கப்பட்ட கைதிகளின் அறையில் அடைக்கப்பட்டதன் பின்னர் குறித்த கைதி நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார்.

images-113

குறித்த அறையில் மனநோய் தன்மையுடனான கைதிகள் சிலர் இணைந்து இந்த கைதியை தாக்கி கொலை செய்துள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொதுவாக தண்டனையாக இந்த அறையில் கைதிகளை அடைப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது சிறைச்சாலை சட்டத்திற்கமைய குற்றமான செயலாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அறையில் அடைப்பதற்கு வைத்தியர்களின் பரிந்துரை கட்டாயமானதாகும்.

இந்த கொலைச் சம்பவத்தை அடுத்து குற்றமிழைக்கும் கைதிகளை தடுத்து வைக்க மாற்று ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைத் தகவல் தெரிவிக்கின்றன.