ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான பிரியந்த சிறிசேன படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணை ஜூரி சபையின் முன்னிலையில் இடம்பெறவுள்ளது.
நவம்பர் 20ஆம் திகதி தொடக்கம் 30ஆம் வரை ஜூரி சபையின் முன்னிலையில் நடைபெறவுள்ளதாக பொலநறுவை மேல்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கின் சந்தேகநபரான டொன் இஷார லக்மால் சப்பு தந்திரி (வயது – 34) பொலநறுவை மேல்நீதிமன்ற நீதியரசர் நிமால் ரணவீரவின் முன்னிலையில் தான் நிரபராதி எனத் தெரிவித்ததையடுத்து வழக்கு மேற்குறிப்பிட்ட கால எல்லையில் ஜூரி சபை முன்னால் தொடர்ந்து விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, ‘வெலி ராஜு’ என அழைக்கப்படும் பிரியந்த சிறிசேன 2015 மார்ச் மாதம் கோடரியொன்றால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்த வழக்கின் அரச தரப்பு சாட்சிகளில் ஜனாதிபதியின் மற்றொரு சகோதரரான டட்லி சிறிசேனவும் இடம்பெறுகிறார்.