வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட நபர் கைது

வவுனியாவில் பல இளைஞர்களிடம் கப்பல் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பல இலட்ச ரூபா பணம் மோசடி செய்த நபரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

dvd

குறித்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவைச் சேர்ந்த சிவனேஸ்ராஜா வினோத்குமார் எனும் 29 வயதான இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர், வவுனியா – பூவரசங்குளத்தைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை விஸ்வதீபன் என்பவரிடம் கொழும்பு கப்பல் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து 1,586,000 பணத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், இதன் பின்னர் அவரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாவும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.