கடும் பின்னடைவை சந்தித்துவரும் இலங்கை கிரிக்கெட் அணியை முன்னாள் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்கவினால் மட்டுமே எழுச்சிபெற செய்ய முடியும் என சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அணியின் மிகமேசாமான செயற்பாடு குறித்தும் அணியை எழுச்சி பெறசெய்வதற்கு தீர்வு காணும் வகையிலும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், வருடங்களாக இலங்கை கிரிக்கெட் அணியுடன் தொடர்பில் இல்லை. இலங்கை தற்போதைய கிரிக்கெட் நிலைமைக்கு கிரிக்கெட் அமைச்சும், கிரிக்கெட் சபையுமே பொறுப்பு கூறவேண்டும். விளையாட்டு அமைச்சரே கிரிக்கெட் சபையிடம் இதற்கான கேள்வியை தொடுத்து nழுத்தம் கொடுத்து முடிவு காண வேண்டும்.
தற்போதைய இலங்கை அணியின் நிலைமை குறித்து யார் வேண்டுமென்றாலும் விமர்சிக்காலம் ஆனால் அப்பதவியில் இருப்பவர்களால் மட்டுமே இதற்காக சரியான முடிவை காணமுடியும். இலங்கை கிரிக்கெட் துறையை பொறுத்த வரை அர்ஜூன ரணதுங்கவே ஜாம்பவான்களை உருவாக்கினார்.
குறிப்பாக அவர் அணித்தலைமையை ஏற்ற பிறகு மாவன் அத்தபத்து, மஹேல ஜயவர்தன போன்ற வீரர்களை அணிக்காக உள்வாங்கினார். அதன்பிறகு அவர் அதிகம் சாதித்தும் காட்டினார். தற்போதைய அமைச்சினால் இலங்கை அணியை சீர்செய்ய முடியாது போனால் அர்ஜூனவிடம் இப்பதவியை மாற்றலாம். அவரும் இதற்கு முன்னர் அணியை சிறந்த அணியாக உயர்த்தியுள்ளார். ஆகவே அவருக்கும் வாய்ப்பளித்து பார்க்கலாம் என கூறினார்.