மிருக வதையான வேள்வியை யாழ்ப்பாணத்தில் இருந்து முற்றாக நிறுத்திமைக்கு காரணமானவர் யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்.
அவர் கொடுத்த மிருக பலி தடை தீர்ப்பால் யாழ்ப்பாணத்தில் உள்ள சமூகஆர்வலர்களும் மக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
இந் நிலையில் குறித்த மிருகபலியை தீர்ப்பை மீறி சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி நடாத்துவதற்கு பலர் முயன்று வருகின்றனர்.
இங்கு காட்டப்பட்டுள்ள புகைப்படங்கள் தென்மராட்சியில் உள்ள சாமித்தறை அண்ணமார் கோயில்சாமித்தறையில் எடுக்கப்பட்டவையாகும். கோழியின் கழுத்தை முறுக்கித் திருகி இரத்தம் குடிக்கின்றார் மனித அண்ணமார்.