நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் 13ஆம் நாள் திருவிழா

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் 13ஆம் நாள் திருவிழா இன்று இடம்பெறுகின்றன.

இதன்போது சிவன் மைந்தன் வள்ளி தெய்வானையோடு வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிகின்றான்.

பசுக்களின் தாயான காமதேனுவின் மேலேறி இன்று கந்தன் வலம் வருகின்றான்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா கடந்த மாதம் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்துக்கு நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருகின்றமை சிறப்பம்சமாகும்.