நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 11ஆம் நாள்

வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 11ஆம் நாள் திருவிழா பூஜைகள் இன்று வெகு விமர்சையாக இடம்பெறுகின்றன.

கடந்த மாதம் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

ஆலயத்தில் இன்று காலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் வெளிவீதி வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் பத்தாம் நாள் திருமஞ்சத் திருவிழா நேற்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்வசத்துக்கு நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருகின்றமை சிறப்பம்சமாகும்.