துவாரகேஸ்வரன் கைது! 7 நாள் தடுப்பில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் துவாரகேஸ்வரன் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

download (24)

போக்குவரத்து அனுமதி வழங்கும் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாகவும், கொழும்பில் வாகன தரிப்பிடத்தில் முறையற்ற விதத்தில் தனது வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த குற்றத்திற்காகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய, கொழும்பு பொலிஸார் துவாரகேஸ்வரனைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட துவாரகேஸ்வரனை பொறுப்பேற்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்க சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.