வித்தியா கொலை வழக்கு இறுதிகட்டத்தில். பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவு..!!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் 9 எதிரிகளுக்குமான பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்துமாறு யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் அறிவுறுத்தியது.

k2

மாணவி படுகொலை வழக்கு விசாரணைகள் 3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயம் முன்னிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வருகிறது.

வழக்குத் தொடுனர் தரப்புச் சாட்சியங்கள் முடிவடைந்துள்ள நிலையில் வழக்கின் எதிரிகளுக்குமான பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்துமாறு தீர்ப்பாயம் பணித்தது.

‘எதிரிகளுக்கான குடிதண்ணீர், உணவு உள்ளிட்டவை சிறைச்சாலையால் மட்டுமே வழங்கப்பட வேண்டும். நீதிமன்ற வளாகத்துக்குள் எதிரிகளை எந்தவொரு நபரும் சந்திக்க அனுமதிக்கக் கூடாது. எதிரிகளை அவர்களது உறவினர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மட்டுமே சந்திக்க முடியும்’ என யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு தீர்ப்பாயம் அறிவுறுத்தியது