3 வயதுடைய சிறுவன் பலி

நொச்சியாகம – போகஹவேவ பிரதேசத்தியை சேர்ந்த 3 வயதுடைய சிறுவன் ஒருவன் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளான்.

download (12)

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், பேஷல இதுரங்க எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் சுமார் 15 அடி ஆழமுடைய கிணறில் சிறுவன் மற்றும் அவனது தாய், வீட்டின் அருகாமையில் உள்ள மரம் ஒன்றின் கீழ் உறங்கஅத்துடன், தனது தம்பியை காணவில்லை என அறிந்து மூத்த மகனான அண்ணன், தம்பியை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளார்.

இதேவேளை, அயலவர்களின் உதவியுடன் சிறுவனை கிணற்றில் இருந்து மீட்டு நொச்சியாகமை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இருப்பினும், சிறுவன்,வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.