6, 15, 24 ஆம் திகதிகளில் பிறந்தோருக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017

27.7.2017 முதல் 13.2.2019 வரை

கலைகாரகனான சுக்கிரனை நாயகனாகக் கொண்ட ஆறாம் எண் அன்பர்களே, இயற்கையின் இன்ப ரகசியங்களை இனிமையாக வாழ்வில் ரசித்து அனுபவிப்பவர்கள் நீங்கள். நல்ல பண்பும் தெய்வீகமும், தனித்துவமும், அழகு சாதனங்களில் நாட்டமும், சுகத்தை அனுபவிப்பதிலும், பிறரைக் கவர்வதிலும் வல்லவர்கள். கலைத்துறையில் மிகுந்த நாட்டமுடையவர்கள். சினிமா, தொலைக்காட்சித் துறைகளில் உங்கள் பங்கு பெரும்பான்மையானது. புதுப்புது வகைகளில் வடிவமைப்புச் செய்து ஆடை, ஆபரணத்துறையில் பெரும் பெயர் பெறுபவர்கள். எந்தக் காரியத்தை எடுத்தாலும் முடிக்காமல் விடமாட்டீர்கள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். நண்பர்களுக்கு மிக அதிகமாகவே செலவிடுவீர்கள் நட்சத்திர ஓட்டல்களில் ஜமாய்ப்பீர்கள்.

astro-numo6

இயற்கையின்மேல் மிகுந்த நாட்டமுடைய நீங்கள் குளிர்ச்சியான இடங்களில் அதிகமான நேரத்தைக் கழிப்பவர்கள். எதற்கும் அஞ்சாத நீங்கள் கண்ணாடியில் அடிக்கடி தன் முகத்தைப் பார்த்து, இதைவிட அழகாக இருந்திருக்கலாமோ என்று வருத்தப்படுவர்கள். பூலோக வாழ்வே சிறந்தது என்றும் இதில்தான் அனுபவிக்க ஏராளமான விஷயங்கள் உண்டு என்றும் நினைப்பவர்கள். இந்த ராகுகேது பெயர்ச்சியில் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். உடல்நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்தாரால் மருத்துவச் செலவு ஏற்படும். கணவர்மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். உற்றார், உறவினரை அனுசரித்துச் செல்லவேண்டியிருக்கும், திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும்.

பணவரவில் நெருக்கடி நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகளால் வீண்பிரச்னைகளை சந்திப்பீர்கள். ஆனால், எதையும் சமாளிக்கும் திறன் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் இருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஓரளவு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள் பணவரவில் நெருக்கடி நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகளால் வீண்பிரச்னைகளை சந்திப்பீர்கள். ஆனால், எதையும் சமாளிக்கும் திறன் உண்டாகும்.

ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் இருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஓரளவு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.
பொருளாதார நிலை சுமாராக இருக்கும். வாங்கிய பணத்தை திருப்பித்தருவதில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்ததைக்கேட்டால் அது பகையாக மாறும். வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகளும், நெருக்கடிகளும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையும். உடனிருப்பவர்களே தேவையற்ற பிரச்னைகளை
ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பையும் பெறமுடியாமல் போகும். சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிலும் திறம்படச் செயல்படுவீர்கள். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வு தாமதப்பட்டாலும், உத்தியோக உயர்வு கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல் உண்டாகும். அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்திசெய்தால் பதவிக்கு பங்கம் ஏற்படாது பார்த்துக்கொள்ள முடியும். கட்சிப்பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டிவருவதால் அலைச்சல் அதிகரிக்கும். உடல்நிலையில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. வாக்குறுதிகள் கொடுக்கும்போது சிந்தித்துச் செயல்படவும். பெண்கள் உடல்நலத்தில் கவனமெடுப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம்.

குடும்ப பிரச்னைகளை வெளிநபர்களிடம் பகிர வேண்டாம். மணவயதை அடைந்தவர்களுக்கு மணமாக சில தடைகள் ஏற்படும். பணவரத்து சுமாராக இருக்கும்.
கலைஞர்களுக்குப் பயணங்களால் அலைச்சல், உடல் சோர்வும் ஏற்படும். சொகுசு வாழ்வில் பாதிப்பு ஏற்படும். நினைத்ததை நிறைவேற்ற முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவ, மாணவியர்களுக்கு கல்வியில் மந்தநிலை உண்டாகும் காலமிது என்பதால் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. கல்விரீதியாக மேற்கொள்ளும் எந்த காரியத்திலும் தடை ஏற்படும். தேவையற்ற நட்புகள் உங்களை வேறுபாதைக்கு அழைத்துச்செல்லும். எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். பொதுவாக தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகக்கூடிய காலம் என்பதால் உடல்நலத்தில் அடிக்கடி பாதிப்பு உண்டாகும். உடல் சோர்வடையும். குடும்பத்திலுள்ளவர்களுக்கும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத வீண் விரயங்களும் ஏற்படும்.

பரிகாரம்:

தினமும் மஹாலக்ஷ்மியை வணங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்மியை நஹ” என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும்.

மலர் பரிகாரம்:

மல்லிகைசரத்தை லக்ஷ்மிக்கு சாத்தி வணங்கவும்.

சிறப்பான கிழமைகள்:

புதன், வெள்ளி.

அனுகூலமான திசைகள்:

தெற்கு, வடகிழக்கு.

அதிர்ஷ்ட எண்கள்:

6, 9.