கடந்த போட்டியில் நாம் செய்த தவறுகளை மறந்துவிட்டு நல்ல மனநிலையுடன் முன்னேற வேண்டும் என இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால், சக வீரர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி பற்றி விளக்கும் ஊடக சந்திப்பில், கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த போட்டியில் நாம் செய்த தவறுகளை மறந்துவிட்டு நல்ல மனநிலையுடன் முன்னேற வேண்டும். இதனையே நான் எப்போது வீரர்களிடம் கூறுகிறேன். வீரர்களும் போட்டியை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றனர்” என கூறினார்.
நிமோனியா காய்ச்சல் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடாத அணித்தலைவர் சந்திமால், இன்றைய இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.