மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞனும் மாடும் பலி

மட்டக்களப்பு கொழும்பு வீதியில் பிள்ளையாhரடி பகுதியில் மோட்டார்சைக்கிள் மாட்டுன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் மாடும் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளரவு இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

images (2)

 

மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்ற கிரான் கும்புறுமூலை வெம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய சிறிகரன் நிசாந்தன் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2.30 மணிக்கு பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மட்டக்களப்பு – கொழும்பு வீதியிலுள்ள பிள்ளையாரடி பகுதியில்  மோட்டர்சைக்கிள் ஒன்று மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும் மாடும் உயிரிழந்த நிலையில் இருப்பதைக்கண்ட பொலிஸார், உயிரிழந்த இளைஞரின் சடலத்தை மீட்டு மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் ஒப்படைத்ததாக பொலிசார் தெரிவித்தனர்.