எதிர்வரும் 2 ஆம் திகதி நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

protest-_12

எதிர்வரும் 2 ஆம் திகதியை தேசிய எதிர்ப்பு தினமாக அறிவித்து அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த சைட்டம் எதிர்ப்பு மக்கள் அமைப்பு தீர்மானித்துள்ளது.

அரச வளங்களை தனியார்மயப்படுத்துவது, சைட்டம் நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுக்காமை, எட்கா உடன்படிக்கை, காணாமல் போனவர்கள் தொடர்பான சட்டம், தேர்தல் ஒத்திவைக்கப்படுவது ஆகிய காரணங்களை அடிப்படையாக கொண்டு இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த இந்த அமைப்பு தீர்மானித்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள், மக்கள் விடுதலை முன்னணி, தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், மாணவர் அமைப்புகள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.