வீடு திரும்பினர் சந்திமால்-அசேல

s-a

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் அசேல குணரட்ன ஆகியோர் வீடு திரும்பியுள்ளனர்.

இந்திய அணிக்கெதிரான தொடருக்கு முன்னதாக நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தினேஷ் சந்திமால் தற்போது இந்நோய் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதையடுத்து அவர் வீடு திரும்பியுள்ளார்.

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில், நான்கு போட்டிகள் இருப்பதால் எதிர்வரும் போட்டிகளில் சந்திமால் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோல் இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்டில் களமிறங்கிய அசேல குணரட்ன, களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட காயத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை செய்துக்கொண்டார்.

அவரும் தற்போது மருத்தவமனையிலிருந்து திரும்பியுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் நான்கு வாரங்கள் ஒய்வெடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதால் டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.