ஆசிய நோபல் பரிசான ராமன் மக்சாசே விருதைப் பெறுகிறார் இலங்கைத் தமிழ்ப் பெண்

asiaஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ராமன் மக்சாசே விருதுக்கு 82 வயதுடைய இலங்கைத் தமிழ்ப் பெண் சமூக செயற்பாட்டாளரான கெத்சி சண்முகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் அதிபராக இருந்து- 1957ஆம் ஆண்டு விமான விபத்து ஒன்றில் மரணமான ராமன் மக்சாசே நினைவாக, ராமன் மக்சாசே விருது வழங்கப்பட்டு வருகிறது.

மக்சாசே அறக்கட்டளையால் ஆண்டு தோறும் ஆறு துறைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது ஆசியாவின் நோபல் பரிசு என்று வர்ணிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருது இலங்கைத் தமிழ்ப் பெண்ணான கெத்சி சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.