நடிக்க தெரியாது! வேண்டாம், சூர்யாவை அனுப்பிவிடுங்கள் , இப்படி சொன்னது யார் தெரியுமா – பிறந்தநாள் ஸ்பெஷல்

SOORYA

திரையுலகில் அப்போது முதல் இப்போது வரை தனித்துவம் பெற்றவர் நடிகர் சூர்யா. இவர் மட்டுமல்ல இவரின் ஒட்டுமொத்த குடும்பமும் தான். சினிமாவின் மார்கண்டேயன் எனும் ஒரு திறமையான கலைஞரான சிவக்குமாரின் மூத்த புதல்வன் சரவணன் என்னும் சூர்யாவின் பிறந்தநாள் இன்று ஜூலை 23.

திரைத்துறையில் இருப்பவர்கள் தன் மகனை நடிகனாக நினைப்பது தவறல்ல. ஞாயமான ஆசைதானே. ஆனால் சினிமாவில் வேண்டாம், தன் மகனை அனுப்பிடுங்கள் என சொன்ன ஒரு தந்தை சொல்கிறார் என்றால் நம்பமுடிகிறதா? அப்படி சொன்னவர் தான் சிவகுமார்.

சூர்யா படித்துமுடித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய சமயம், டைரக்டர் வசந்த், மணிரத்னம் ஆகியோர் தான் சூர்யாவை திரைக்கு அழைத்து வந்தவர்கள்.

வீடியோ டெஸ்ட் நடந்தது. ஆனால் சிவகுமார் மணிரத்னத்திற்கு போன் செய்து, சினிமா சம்மந்தமாக சூர்யாவுக்கு எதுவும் தெரியாது. நான் அப்படி அவனை வளர்க்கவில்லை. நீங்கள் எதுவும் பெரியதாக எதிர்பார்க்காதீர்கள். டெஸ்ட் செய்து ஏமாந்துவிடாதீர்கள்.

ஒருவேளை டெஸ்ட் செய்து ஒதுவிட்டால் அவன் வாழ்க்கை பாதிக்கும். இப்படியே அவனை அனுப்பிவிடுங்கள் என சொன்னாராம். ஆனால் மணிரத்னம் நீங்கள் எதுவும் கவலைபடவேண்டாம், சூர்யா மீது 200% நம்பிக்கையுள்ளது என கூறினார்.

நடிகனாக இருந்தாலும் சூர்யாவை பொறுத்தவரை சிவக்குமார் ஒரு தந்தையாகவே வாழ்ந்திருக்கிறார். சினிமாவிற்குள் வந்து தன் முயற்சிகளால் விசயங்களை கற்றுக்கொண்டு ஒரு கலைஞனாக தன்னையும், தன் அப்பாவின் புகழையும் நிலை நாட்டியவர் சூர்யா.