நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா

கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

அட்லீ தயாரிப்பில் இந்தியில் உருவாகி வரும் பேபி ஜான் திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் தான் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகும். அதன்பின் அது வெறும் வதந்தி தான் என தெரியவரும். அந்த வகையில் தற்போது கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

திருமணம்
அதன்படி, நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 13 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வருகிறாராம். அவர் கேரளாவை சேர்ந்தவர் என்றும், அவர் நகைக்கடை உரிமையாளரின் மகன் என்றும் கூறப்படுகிறது. இருவரும் 13 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், தற்போது திருமணம் நடக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் இது உண்மையா அல்லது எப்போதும் போல் வதந்தியா என்று.

ரீ-ரிலீஸில் வசூலை வாரி குவிக்கும் விஜய்யின் கில்லி!

கில்லி
விஜய்யின் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் கில்லி. தரணி இயக்கத்தில் உருவான இப்படம் தெலுங்கில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

ஆனால், திரைக்கதையை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சுவாரஸ்யமாக மாற்றியமைத்து மேஜிக் செய்தார் இயக்குனர் தரணி. அதுவே இப்படம் இன்று வரை நின்றுபேசக்கூட அளவிற்கு காரணமாக இருக்கிறது.

வசூல் சாதனை
20 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்திருக்கும் கில்லி திரைப்படம் கடந்த வாரம் ரீ-ரிலீஸ் ஆனது. இதனை திரையரங்கில் திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.

ப்ரீ புக்கிங்கிலேயே வசூல் சாதனை படைத்த கில்லி படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ரீ-ரிலீஸில் கில்லி திரைப்படம் கடந்த இரண்டு நாட்களில் ரூ. 11 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. புதிய படங்களுக்கு இடையான வசூலை ரீ-ரிலீஸ் ஆன திரைப்படம் செய்து வருகிறது என பலரும் கூறி வருகிறார்கள்.

சைக்கிளில் வந்தது பற்றி விஷால் கொடுத்த விளக்கம்

நடிகர் விஜய் ஏற்கனவே அரசியல் கட்சி தொடங்கி அரசியல்கள் களமிறங்கி விட்டார். அதனை தொடர்ந்து விரைவில் தானும் அரசியலில் நுழைவேன் என அறிவித்தார் விஷால்.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் விஷால் சைக்கிளில் வாக்களிக்க வந்தார். முந்தைய தேர்தலில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்த நிலையில், அதை விஷால் அப்படியே காபி அடித்துவிட்டார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

விஷால் பதில்
இந்நிலையில் நடிகர் விஷால் இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். ‘என்னிடம் வேறு வண்டி இல்லை. அப்பா, அம்மாவுக்கு ஒரு வண்டி இருக்கிறது. மற்றதை விற்றுவிட்டேன்.

இப்போது இருக்கும் ரோடு கண்டிஷனுக்கு வண்டி சஸ்பெண்க்ஷனை வருடத்திற்கு மூன்று முறை மாற்ற முடியாது.

என்னிடம் காசு இல்லை. அதனால் சைக்கிள் வாங்கினேன் என கூறி இருக்கிறார் விஷால்.

தலைவர் 171 படத்தின் டீஸர் வெளியானது!

லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி சேரும் படம் தற்காலிகமாக தலைவர்171 என அழைக்கப்பட்டு வருகிறது.

படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படும் என முன்பே லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதனால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.

டைட்டில் – கூலி
இந்நிலையில் டைட்டில் அறிவிப்பு வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. “கூலி” என டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே வெளியான போஸ்டர்களில் ரஜினி கையில் கடிகாரங்களால் விளங்கு போட்டிருப்பது போல காட்டப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த டைட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

விஜய் நிராகரித்து விக்ரம் நடித்து பெரிய ஹிட் ஆன படம்

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்து வருகிறார். அவரது கெரியரில் பல்வேறு பெரிய ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.

அதே நேரத்தில் பல கதைகளை வேண்டாம் என அவர் நிராகரித்த பிறகு வேறு ஹீரோக்கள் நடித்து படம் பெரிய ஹிட் ஆகவும் மாறி இருக்கின்றன. அதே நேரத்தில் பல கதைகளை வேண்டாம் என அவர் நிராகரித்த பிறகு வேறு ஹீரோக்கள் நடித்து படம் பெரிய ஹிட் ஆகவும் மாறி இருக்கின்றன.

தூள்
விக்ரம் நடித்த தூள் படத்தின் கதையை இயக்குனர் தரணி முதலில் விஜய்யிடம் தான் கூறினாராம். ஆனால் அவர் அதற்கு ஓகே சொல்லாத நிலையில் அடுத்து தான் விக்ரமை நடிக்க வைத்து இருக்கிறார்.

தூள் படம் விக்ரம் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

கழிவறை சுத்தம் செய்த நடிகர் அப்பாஸ்

அப்பாஸ்
90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகர்களின் ஒருவர் அப்பாஸ். இவர் 1996ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இதன்பின் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அப்பாஸ் சூப்பர்ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் கூட நடித்து வந்தார். இவர் கடைசியாக மலையாளத்தில் வெளிவந்த பச்சக்கள்ளம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

1997ஆம் ஆண்டு எரும் அலி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் தற்போது செட்டிலாகிவிட்டார் அப்பாஸ்.

கழிவறை சுத்தம் செய்தேன்
இந்த நிலையில், நடிகர் அப்பாஸ் தனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்கள் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசினாராம்.

இதில் அவர் “சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தது. அப்போது என் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்பதற்காக பைக் மெக்கானிக்காக வேலை செய்துள்ளேன். அதுமட்டுமின்றி கழிவறை சுத்தம் செய்தேன். மேலும் டாக்சி டிரைவராகவும் நியூசிலாந்தில் வேலை செய்துளேன்” என கூறினார்.

திரையுலகில் உச்சத்தில் இருந்த அப்பாஸ், தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் குறித்து பேசியது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சன்டீவியில் இந்த வாரத்தோடு முடிவுக்கு வரும் சீரியல்!

சன் டிவி தான் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. டாப் 5 சீரியல்கள் லிஸ்டில் நிச்சயம் சன் டிவி தொடர்கள் தான் நான்கு இடங்களை பிடித்து வருகின்றன.

அந்த அளவுக்கு சன் டிவி சீரியல்களுக்கு சின்னத்திரை ரசிகர்களிடம் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

இந்த வாரம் முடியும் சீரியல்
சன் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் அன்பே வா சீரியல் இந்த வாரத்தோடு நிறைவு பெறுகிறது.

இந்த தொடரின் கிளைமாக்ஸ் வரும் ஞாயிறு (ஏப்ரல் 28, 2024) அன்று ஒளிபரப்பாக இருக்கிறது.

இலங்கை மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்

வருடாந்திர தோன்றும் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான லிரிட்ஸ் விண்கல் மழை இன்று (22) நள்ளிரவு வடக்கு வானில் தோன்றும் என விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 29 வரை நிகழும். இந்த விண்கல் மழை லிரிட்ஸ் என அழைக்கப்படுவதாக விண்வெளி விஞ்ஞானி பொறியியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அதேசமயம் “இந்த விண்கல் மழையில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 20 விண்கற்கள் விழும். இது இன்று இரவு அல்லது நாளை காலை உச்சத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதோடு . இன்று நள்ளிரவுக்குப் பிறகு பார்க்கலாம். இது இந்த விண்கல் மழையை காலை 4 – 5 மணிக்குள் வடக்கு திசையில் கண்ணால் பார்க்க முடியும்.

வவவுனியா வைத்தியசாலையில் சோகம் குளியலறையில் வழுக்கி விழுந்த கர்ப்பிணி மரணம்!

வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித்தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்த நிலையில் , அவரது வயிற்றில் இருந்த சிசுவும் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மதவாச்சி பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணித்தாய் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் விடுதியில்

தோல்வியில் முடிந்த முயற்சி
இந்நிலையில் அவர் இன்று திங்கட்கிழமை (22) விடுதியில் உள்ள குளியலறைக்கு சென்றநிலையில் தவறி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திலேயே கர்ப்பிணி உயிரிழந்த நிலையில் அவர் மீட்கப்பட்டு அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்கான சத்திரசிகிச்சையினை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

எனினும் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியா வைத்தியசாலையில் தாய் மற்றும் சிசு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

25 நாட்களில் ஆடுஜீவிதம் படம் செய்துள்ள வசூல்..

ஆடுஜீவிதம்
சமீபகாலாமாக மலையாள திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ப்ரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் போன்ற படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றது. இதை ப்ரேமலு ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

மஞ்சும்மல் பாய்ஸ் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து மலையாளத்தில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது. அந்த வரிசையில் தற்போது ஆடுஜீவிதம் திரைப்படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

வசூல் சாதனை
பிரித்விராஜ் நடிப்பில் பிளஸ்சி இயக்கத்தில் உருவான இப்படம் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. முதல் நாளில் இருந்து இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், தற்போது 25 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடிவருகிறது ஆடுஜீவிதம்.

இந்த நிலையில், இப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 25 நாட்களாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஆடுஜீவிதம் படம் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளனர்.

இன்றைய வானிலை முன்னறிப்பு!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (21) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல் மாகாண கடலோரப் பகுதிகளில் காலையிலும் மழை பெய்யும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலின் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை கோரியுள்ளது.

கர்ப்பமாக இருக்கும்போது மரணமடைந்த நடிகை சௌந்தர்யா!

நடிகை சௌந்தர்யா
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. இவர் கன்னடத்தில் வெளிவந்த கந்தர்வா படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழில் இவருக்கு அறிமுகத்தை கொடுத்த திரைப்படம் என்றால் அது பொன்னுமணி தான். ஆம், கார்த்தி நடிப்பில் வெளிவந்த பொன்னுமணி படத்தின் மூலம் தாம் தமிழில் அறிமுகமானார். இதன்பின் ரஜினிகாந்த், கமல், சத்யராஜ் என பலரும் இணைந்து நடித்தார்.

திரையுலகின் உச்சத்தில் இருந்த நடிகை சௌந்தர்யா, கடந்த 2004ஆம் ஆண்டு விமான பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தில் காலமானார். இவர் மரணமடையும் போது 7 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.

சொத்து
உயிரிழந்த நடிகை சௌந்தர்யாவின் பெயரில் பல கோடி சொத்துக்கள் இருந்துள்ளதாம். இதுகுறித்து அவர் உயில் ஒன்றை எழுதி வைத்ததாக கூறப்பட்டது. ஆனால், அதை சௌந்தர்யாவின் தாய் மற்றும் கணவரும் இருவரும் மறுத்துவிட்டனர். 31 வயதிலேயே அவர் உயில் எழுத வேண்டிய எந்த அவசியமும் இல்லை என கூறி மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மறைந்த நடிகை சௌந்தர்யாவின் பெயரில் இருந்து ரூ. 100 கோடி சொத்து சம்மந்தமான உயில் குறித்து மீண்டும் பேச்சு துவங்கியுள்ளது. சௌந்தர்யா எழுதிய உயிலை மறைத்து அவருடைய தாய் மற்றும் கணவர் இருவரும் அந்த சொத்துக்களை பாதி பாதியாக பங்கு போட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் தற்போது உலா வரும் நிலையில், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ராசிபலன்கள் 21.04.2024

மேஷ ராசி அன்பர்களே!

பிள்ளைகள் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி உண்டாகும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே!

காலையில் அசதியும் சோர்வும் நிறைந்திருக்கும். என்றாலும் பிற்பகலுக்கு மேல் உற்சாகமும் மகிழ்ச்சியுமாகக் காணப்படுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். விநாயகர் வழிபாடு நன்று.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.

மிதுன ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். செயல்களில் துணிச்சல் வெளிப்படும். குடும்பம் தொடர்பான பிரச்னை ஒன்று சுமுகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட சிறுசிறு பிணக் குகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துத் தொடங்கு வது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். அம்பிகை வழிபாடு நலம் சேர்க்கும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கடக ராசி அன்பர்களே!

காலை முதலே சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் கடன் வாங்காமல் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் முயற்சிகளுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அம்பிகையை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

சிம்ம ராசி அன்பர்களே!

முற்பகலில் செயலில் நிதானம் தேவை. வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பேசும்போது பொறுமை அவசியம். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். பணியாளர்களிடம் போதுமான ஒத்துழைப்பு கிடைக்காது. சிவபெருமானை வழிபடுவது நன்று.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் மூலம் ஆதாயம் பெறும் வாய்ப்பு ஏற்படும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும் நல்ல நாள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது நல்லது.

துலா ராசி அன்பர்களே!

குடும்பத்தினரால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அதன் காரணமாக கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர் பார்த்த காரியம் முடிவது மகிழ்ச்சி தரும். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குச் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக் கவும். தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பங்குதாரர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். பைரவர் வழிபாடு பலன் தரும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகம் நிறைந்திருக்கும் நல்ல நாள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிற்பகலுக்குமேல் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மற்ற வர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே காணப்படும். பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். அம்பிகையை வழிபடுவது நன்று.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.

மகர ராசி அன்பர்களே!

சற்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். பிற்பகலுக்கு மேல் தாய்வழி உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக் கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவர்களி டம் கனிவாக நடந்துகொள்ளவும். விநாயகரை வழிபடுவது நலம் சேர்க்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே!

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். திடீர் செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். முக்கிய முடிவு களை ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும். பணியாளர்களுக்காக செலவு செய்ய நேரிடும். இன்று மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பானப் பலன்களைத் தரும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவு மகிழ்ச்சி தரும்.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மீனராசி அன்பர்களே!

குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். நீண்டநாள்களாகத் திரும்பிச்செலுத்த நினைத்த கடனைத் தந்து முடித்து நிம்மதியடைவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளால் பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும். துர்கையை வழிபடுவது நன்று.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்

ரொறன்ரோவை விட்டு வெளியேற முயற்ச்சிக்கும் மக்கள்

ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் பலர் வேறும் இடங்களுக்கு செல்ல முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டு வாடகைப் பிரச்சினையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோவில் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகைத் தொகை மூவாயிரம் டொலர்களாகும்.

இவ்வாறான ஓர் பின்னணியில் நகரை விட்டு வெளியேறுவதற்கு சுமார் 60 வீதமான வாடகைக் குடியிருப்பாளர்கள் எத்தனித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் ரொறன்ரோவில் வீட்டு வாடகைத் தொகை 30 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வீட்டு மனைகளின் விலை உயர்வு மற்றும் வாடகைத் தொகை அதிகரிப்பு போன்ற காரணிகளினால் ரொறன்ரோவில் குடியிருப்போர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிளாமர் நடிகைகளை மிஞ்சிட்டாங்களே..96 படத்தில் நடித்த சின்னப்பொண்ணா இது?

96
கடந்த 2018 -ம் ஆண்டு விஜய்சேதுபதி திரிஷா நடிப்பில் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் வெளிவந்த 96 திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

பள்ளி பருவத்தின் காதலை அழகாய் காட்சிப்படுத்திய 90ஸ் கிட்ஸ் மனதை வென்றுவிட்டனர். இப்படம் சூப்பர் டூப்பர் அடிக்க மலையாளம் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்த படத்தில் சிறுவயது திரிஷாவின் தோழியாக நியதி நடித்திருப்பார். இவர் வேறு யாரும் இல்லை அதே படத்தில் நடித்த நடிகை தேவதர்ஷினியின் மகள் தான்.

புகைப்படங்கள்
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நியதி தேவதர்ஷினி, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

அதை பார்த்த ரசிகர்கள், 96 படத்தில நடித்த பொண்ணா இது? இப்படி மாறிட்டாரே என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

இதோ புகைப்படங்கள்..

வாக்களிக்க வந்த திரிஷா..

இன்று நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க பிரபலங்கள் பலரும் காலையில் இருந்தே வந்துகொண்டிருக்கின்றனர்.

அஜித், விஜய் தொடங்கி சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி வரை நடிகர்கள் அனைவரும் வாக்களித்த போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கின்றன.

திரிஷா
நடிகை திரிஷாவும் வாக்களித்துவிட்டு பத்திரிகையாளர்களுக்கு கையை காட்டி போஸ் கொடுத்தார். அவரது அம்மாவும் உடன் வந்து இருந்தார்.

மேலும் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்ற பெண் போலீஸ் தடுமாறி கீழே விழ திரிஷா ஷாக் ஆகி பதறி போனார்.

அப்போது எடுத்த போட்டோ தான் இது.

இந்த சிறு வயது புகைப்படத்தில் இருப்பவர் யார் தெரியுமா?

சிறுவயது புகைப்படம்
திரை பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நமது சினிஉலகம் பக்கத்தில் பதவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளோம்.

அந்த வகையில் தற்போது தமிழ், மலையாள மொழிகளில் பிரபலமான நடிகர் ஒருவரின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

யார் தெரியுமா ?
இந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாருமில்லை, பிரபல நடிகர் ஜெயராமின் மகனும் நடிகருமான காளிதாஸ் தான்.

மலையாள படங்களில் நடித்து வந்த இவர், மீன் குழம்பும் மண்பனையும் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனை அடுத்து இவர் நடித்த பாவ கதைகள் வெப் தொடர்க்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்தனர். இவருடைய நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இவர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் என்ற படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

 

விவாகரத்து பிரச்சனை! ரஜினியை நேரில் சந்தித்த தனுஷ்..

ஐஸ்வர்யா – தனுஷ்
ஐஸ்வர்யா – தனுஷ் விவாகரத்து சர்ச்சை தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 2004ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை தனுஷ் – ஐஸ்வர்யா அறிவித்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் சமீபத்தில் விவாகரத்து கேட்டு இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் முறையிட்டனர். 2004ஆம் ஆண்டு நடந்த தங்களுடைய திருமணம் செல்லாத என அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது.

ரஜினிகாந்த்
இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன் தனுஷை அழைத்து பேசியுள்ளாராம் ரஜினிகாந்த். போயஸ் கார்டனனில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு சென்றுள்ளார் தனுஷ். அந்த சந்திப்பில் குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழுமாறு தனுஷிடம் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளாராம்.

ஆனால் எனக்கு விவாகரத்து தான் வேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டாராம் ஐஸ்வர்யா. இதே போல் தனுஷ் வீட்டார்களும், இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்துள்ளனர். அவை யாவும் கூட பலன் தரவில்லை. இதன்பின் தான் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு முறையிட்டுள்ளனர்.

நடிகர் வினித்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா?

வினீத்
கடந்த 1992 -ம் ஆண்டு வெளியான ஆவாரம் பூ என்ற படத்தின் மூலமா தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் வினீத் ஸ்ரீனிவாசன்.

இதனை அடுத்து மே மாதம், காதல் தேசம், சக்தி போன்ற படங்களில் ஹீரோவாகவும் காதல் கிறுக்கன், பிரியமான தோழி, சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் துணை நடிகராகவும் நடித்து வந்தார் வினித். கடைசியாக இவர் தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான சர்வம் தாளமயம் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

புகைப்படம்
நடிகர் வினீத் கடந்த 2004 -ம் ஆண்டு பிரிசில்லா மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் நடிகர் வினீத் தனது மகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

மீனாவை கலங்க வைத்த விஜயா முத்து செய்த தரமான சம்பவம்

சதி செய்த விஜயா
விஜய் தொலைக்காட்சியில் டாப் சீரியல் என்றால் தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் தான் இடம்பிடித்துள்ளது. இந்த சீரியலில் மீனா சொந்தமாக பூ கட்டும் தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக தங்களுடைய வீட்டிற்கு வெளியே கடை வைத்து கொடுத்தார் முத்து.

இதன்மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து தன்னுடைய கணவருக்கு புதிதாக கார் வாங்கி கொடுத்தார் மீனா. இப்படியொரு சூழ்நிலையில், மீனா மீது ஏற்கனவே கடுப்பில் இருக்கும் விஜயா, அந்த பூ கடைசியை காலி செய்யவேண்டும் என முடிவு செய்துள்ளார்.

முத்து செய்த சம்பவம்
இந்த நிலையில், மீனாவின் பூ கடையை பற்றி புகார் அளித்து, அந்த கடையை காலி வைத்துவிட்டார் விஜயா. இதனால் கண்கலங்கி அழுகிறார் மீனா. இந்த சமயத்தில் மீனாவிற்கு புதிதாக டு வீலர் வண்டி ஒன்றை வாங்கி தருகிறார் முத்து.

சிலர் சதி செய்து மீனாவின் கடையை காலி செய்துவிட்டார்கள், இனிமேல் இந்த வண்டியிலேயே சென்று, எங்கு வேண்டுமானாலும் மீனா பூ விற்கலாம் என முத்து தனது மனைவி மீனாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ..