மீனாவிற்கு இரண்டாவது திருமணமா?

நடிகை மீனா
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது, அப்படிபட்ட ஒரு நடிகை தான் மீனா.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் இவர் தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு வித்யாசாகர் உயிரிழந்தார், அவரது இழப்பில் இருந்து மீனா வெளியே வர பிரபலங்கள் பலரும் உதவினார்கள். தற்போது நடிப்பதை தாண்டி நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி நடன நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

மறுமணம்
நடிகையின் கணவர் இறந்ததில் இருந்து நடிகை மீனாவின் மறுமணம் குறித்து நிறைய தகவல்கள் வந்துகொண்டே இருக்கிறது.

ஒரு சமயம் சினிமாவில் இல்லாத நடிகையின் நண்பர் என்றும் பிரபலத்தை தான் அவர் திருமணம் செய்கிறார் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் நடிகை மீனா சமீபத்தில், சமூக வலைத்தளத்தில் உண்மைகளை சொல்லுங்கள், அதுதான் நல்லது. நாட்டில் என்னைப்போல் தனிமையில் வாழும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அவர்களின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் பற்றி யோசியுங்கள். தற்போதைக்கு எனக்கு இரண்டாவது திருமணம் பற்றி எந்த சிந்தனையும் இல்லை. எதிர்கால முடிவு பற்றி இப்போது எப்படி சொல்ல முடியும் என காட்டமாக பேசியுள்ளார்.

அடுத்த கலியாணம் எப்போ ரசிகரின் கேள்விக்கு பதில் கொடுத்த வனிதா

வனிதா விஜயகுமார்
பிரபல நடிகர் விஜயகுமார் அவர்களின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் வனிதா விஜயகுமார்.

ஆரம்பத்தில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் சில படங்களிலேயே காணாமல் போனார்.

அதன்பிறகு திருமணம், குழந்தைகள் என பல வருடங்கள் சினிமா பக்கம் வராமல் இருந்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ், குக் வித் கோமாளி, பிக்பாஸ் கொண்டாட்டம் என தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார்.

இப்போது சொந்தமாக நிறைய தொழில்கள் தொடங்கி அதிலும் வெற்றிகரமாக முன்னேறி வருகிறார்.

ரசிகரின் கேள்வி
நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்ஸ்டா ஸ்டோரியில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார் வனிதா. அதில் ஒரு ரசிகர் அடுத்த கல்யாணம் எப்போது என கேட்க அவர் எதிர்ப்பாராததை எதிர்ப்பாருங்கள் என பதில் கொடுத்துள்ளார்.

சதிவலையில் சிக்குவாரா முத்து வெளியாகிய ப்ரோமோ

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது வீட்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மருமகள்கள் ரோகினி மற்றும் ஸ்ருதி ஆகியோரின் தாலி பிரித்து கோர்க்கும் விழா நடைபெற இருக்கிறது.

அதில் முத்துவுக்கு எதிராக பெரிய சதி திட்டம் ஒன்றை போடுகிறார் ரோகிணி. முத்துவை குடிக்கவைத்து எப்படியாவது தன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என துடிக்கிறார்.

சதி திட்டம்
முத்துவை கோபப்படுத்த வேண்டும் என்பதற்காக இரண்டு பேரை அந்த விழாவுக்கு வர வைக்கிறார் ஸ்ருதியின் அம்மா. முத்து கோபத்தில் எதாவது செய்தால் அதை வைத்து ஸ்ருதியை தன் வீட்டுக்கு அழைத்து சென்று விட வேண்டும் என திட்டம் போடுகிறார் அவர் அம்மா.

முத்து இதில் சிக்குவாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ப்ரோமோ இதோ..

 

தங்க நிலவரம்

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (22) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 662,620 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 23,380 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 187,000 ரூபாவாகவும், 22 கரட் 1 கிராம் தங்கம் 21,440 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேபோல , 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 171,500 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 20,460 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 163,700 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளன.

வாழ்நாள் முழுவதும் தண்ணீர் அருந்தாத உயிரினம்

பொதுவாகவே உலகில் அனைத்து உயிரினங்களின் நிலவுகைக்கும் தண்ணீர் அத்தியாவசியமானது. நீர் இல்லாத பட்சத்தில் எந்த உயிரினமும் உயில் வாழவே முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.

மனிதர்களை பொருத்த வரையில் தண்ணீர் குடிப்பதற்கு மட்டுமன்றி பல்வேறு சுகாதார தேவைகளை பூர்த்தி செய்யவும் தண்ணீர் இன்றியமையாத விடயமாக காணப்படுகின்றது.

பருகுவதற்கு மாத்திரம் நீர் இருக்கும் பட்சத்திலம் மனிதர்களின் வாழ்க்கை சாத்தியமற்றது என கூறினால் மிகையாகாது.

ஆனால் வாழ்நாள் முழுதும் தண்ணீர் பருகாத விலங்கு ஒன்று இருக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் அந்த உயிரினம் தான் கங்காரு எலி.

ஏன் தண்ணீர் அருந்துவது கிடையாது?
விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையில் இந்த இனத்தை சேர்ந்த எலிகள், தன் வாழ்நாள் முழுவதும் நீர் அருந்துவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இன கங்காரு எலிகள் பாலைவனங்களில் வாழ்கின்றன. அவற்றின் செரிமான அமைப்பு சீறான முறையில் இயங்குவதற்கு தண்ணீர் அவசியம் அற்றது என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

மிகவும் வேகமாக ஓடும் திறன் கொண்ட கங்காரு எலிகள் ஒரு நொடியில் சுமார் 6 மீட்டர் தூரம் வரை செல்லக்கூடியது.

இவ்வகை எலிகளின் மொத்த நீளம் 38 செ.மீ ஆகும். அதில் வால் மட்டும் 20 செ.மீ. வரை வளரக்கூடியது. இவை நீண்ட கால்களை கொண்டிருப்பதால் கங்காரு எலி என குறிப்பிடப்படுகின்றது.

அணில் மாதிரி கொரிக்கும் விலங்கு வகையைச் சேர்ந்தவை இந்த கங்காரு எலிகள். பழ விதைகள் தான் முக்கியமான உணவு என்றாலும் எங்காவது எப்போதாவது கிடைக்கும் இலைகளையும், பூச்சிகளையும்கூட உணவாக்கிக்கொள்ளும்.

வருங்காலத்துக்கு உணவு சேகரிப்பதில் இந்தக் கங்காரு எலிகள் மிகவும் சிறப்பாக செயற்படும். போதுமான அளவுக்கு விதைகளைக் கொண்டுவந்து முன்னெச்சரிக்கையாகச் சேமித்து வைத்துக்கொள்ளும்.

பல எலிகள் சேர்ந்து வாழும் வளைகள் என்றால் பெரிய தானியக் களஞ்சியமே வளைக்குள் இருக்கும்.இந்தளவு உணவுகளை சேமித்து வைக்கும் ஆற்றல் கொண்டவை.

இலங்கையில் வேகமெடுக்கும் டீனியா

நாட்டில் டீனியா ( Tinea) எனும் சரும நோய் வேகமாக பரவி வருவதாக தோல் நோய் விசேட வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் இந்த நோய் அதிகம் பரவி வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் நோய் விசேட வைத்திய நிபுணர் ஜானக அகரவிட்ட தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

பிரதான அறிகுறி அரிப்பு
Tinea நோயின் பிரதான அறிகுறி அரிப்பு ஆகும். மேலும், சிவப்பு புள்ளிகள் தோன்றுதல் போன்ற அறிகுறி காணப்படும். அதிகளவில் தோல் சுருங்கும் இடங்களிலும் வியர்வை அதிகளவில் சேரும் இடங்களிலும் அதிகளவில் இது ஏற்படும்.

அக்குள், பாதங்கள் மற்றும் தலையிலும் இத்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகிறது. இது தொடர்பு மூலம் பரவுகிறது, மேலும் சக ஊழியர்களிடையே பரவக்கூடும் என்று அவர் கூறினார்.

இந்த நோயை சிகிச்சைகள் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும் என்பதுடன், நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சருமத்தை தூய்மையாக வைத்திருத்தல், மற்றவர்களின் ஆடைகளை பயன்படுத்தாமல் இருத்தல், தளர்ந்த ஆடைகளை பயன்படுத்தல் போன்றவற்றின் மூலம் இந்த சரும நோய் ஏற்படுவதை தடுக்க முடியும் எனவும் விசேட வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் செய்யும் – லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியின் அடுத்த படத்திற்கான முதற்கட்ட பணிகளில் பிசியாக இருக்கிறார். இதற்கிடையில் ஸ்ருதிஹாசன் உடன் ஒரு பாடலுக்காக கூட்டணி சேர்ந்து இருக்கிறார்.

“இனிமேல்” என பெயரிடப்பட்டு இருக்கும் அந்த பாடலை ஸ்ருதிஹாசன் தான் இசையமைத்து இருக்கிறார். கமல் ஹாசன் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்.

டீஸர்
வரும் மார்ச் 25ம் தேதி இந்த பாடல் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது டீஸர் வெளிவந்து இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் இருவரும் ரொமான்ஸ் செய்வது போல தான் முழு டீசரும் இருக்கிறது. இதோ..

விறுவிறுப்பாக செல்லும் சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த கதைக்களம்

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில், முத்துவிற்கு கார் வந்த சந்தோஷத்தில் அண்ணாமலை, பார்லருக்கு தனது பெயர் இல்லை என்ற கோபத்தில் விஜயா இருக்கிறார்.

கார் வாங்கி கொடுத்த மீனாவிற்கு ஆசை ஆசையாய் பூ, அல்வா வாங்கி வரும் முத்து, ஆனால் கடைசியில் அது காமெடியாக முடிந்தது.

இன்னொரு ஜோடியான ரோஹினி தனது அப்பாவிற்கு என்ன செய்வேன் என்று பெரிய குழப்பத்தில் உள்ளார்.

அண்ணாமலையை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நிறைய பிளான்களுடன் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் ஸ்ருதியின் அம்மா. இப்படி சில காட்சிகளுடன் இந்த வார கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது.

புதிய போட்டோ
இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு சூப்பரான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நேற்று (மார்ச் 20) இந்த சீரியலின் நாயகன் முத்துவின் பிறந்தநாள், அனைவரும் வாழ்த்து கூறி வந்தனர்.

அதேபோல் நேற்று படப்பிடிப்பு தளத்திலும் முத்து என்கிற வெற்றி வசந்திற்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுளளனர். அந்த புகைப்படங்களை பார்க்கும் போது பெரிய மண்டபத்தில் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடந்திருப்பது தெரிகிறது.

இதோ புகைப்படங்கள்,

 

 

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

ஏ.ஆர்.ரகுமான் இசையோடு பிரம்மாண்டமாக தொடங்கப்படும் IPL

ஏ.ஆர்.ரகுமான்
கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் ஐபிஎல் மிகவும் பிரபலம்.

இந்த விளையாட்டு போட்டியில் CSK அணிக்கு உயிரைக் கொடுத்து பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். ஐபிஎல் என்றாலே சிஎஸ்கே தான், சிஎஸ்கே என்றாலே சென்னை தான்.

2024ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி படு பிரம்மாண்டமாக இன்று தொடங்கியுள்ளது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தோனிக்காக தான் இசையமைத்த பாடலை ஸ்பெஷலாக பாட இருக்கிறார்.

வைரல் வீடியோ
இந்த நேரத்தில் தோனியின் தீவிர ரசிகர் ஒருவர் அச்சு அசல் அவரைப் போலவே லுக்குடன் மைதானத்திற்கு வர ரசிகர்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக கூடி அவருடன் புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.

இதோ அந்த வைரல் வீடியோ,

 

 

ரெபல் படம் திரைவிமர்சனம்

ரெபல்
இசையமைப்பாளராகவும், ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டு இருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். இவர் நடிப்பில் இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் ரெபல். இப்படத்தை நிகேஷ் என்பவர் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து மலையாள திரையுலகின் சென்சேஷன் நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். இந்த நிலையில், இன்று வெளிவந்துள்ள ரெபல் படத்தை பார்த்த நபர்கள் கூறிய டிவிட்டர் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. வாங்க படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.

விமர்சனம்
80ஸ்களில் கேரளாவை பின்னணியாக வைத்து, மூணாறு தமிழ் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் பாலக்காடு கல்லூரியில் போராடும் அவல நிலையை இப்படத்தில் காட்டியுள்ளார்.

 

கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் புரட்சிகரமான கல்லூரி மாணவராக அசத்தியுள்ளார். கதாநாயகி மமிதா பைஜூ அழகாவும் போதுமான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். பாடல்கள் மற்றும் பின்னணி இசை சூப்பர்.

படத்திற்கு மிகப்பெரிய பலம் அருண் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை இளைஞர்களை கவரும் வண்ணம் சுவாரஸ்யமாக இயக்கியுள்ளார் இயக்குனர் நிகேஷ்.

மேலும் இப்படத்தை பார்த்த திரையுலக நட்சத்திரங்கள் அஜய் ஞானமுத்து, எம்.எஸ். பாஸ்கர், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரும் இப்படத்தை பாராட்டி பேசியிருந்தார்கள்.

நடிகை பூஜா ஹெக்டேயின் சொத்து மதிப்பு நிலவரம்

பூஜா ஹெக்டே
தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இப்படத்தின் தோல்விக்கு பின் தமிழ் சினிமா பக்கமாவே திரும்பி பார்க்காத பூஜா, தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிக்க துவங்கினார்.

சில ஆண்டுகளிலேயே பல லட்சம் ரசிகர்களின் மனதை கவர்ந்த பூஜா ஹெக்டே முன்னணி நடிகையாக உயர்ந்தார். இதன்பின் நீண்ட நாட்கள் கழித்து தமிழ் சினிமா பக்கம் வந்த பூஜா, விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் தற்போது பாலிவுட்டில் பிசியாக இருக்கும் பூஜா, ‘தேவா’ எனும் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், இந்தியளவில் கனவு கன்னியாக ரசிகர்கள் மத்தியில் வலம் வரும் பூஜா ஹெக்டேவின் முழு சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

சொத்து மதிப்பு :
சினிமா மூலம் நடிகை பூஜா ஹெக்டே சேர்த்து வைத்துள்ள மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 50 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறராம்.

இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட நாயகி பூஜா ஹெக்டே விளம்பரங்களில் நடிக்க ரூ. 40 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் சம்பளம் சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.

நடிகை பூஜா ஹெக்டேவிற்கு சொந்தமாக மூன்று சொகுசு கார்கள் உள்ளனர். Porsche Cayenne ரூ.2 கோடி , Jaguar ரூ. 60 லட்சம் மற்றும் Audi Q7 ரூ. 80 லட்சம். மேலும் மும்பையில் சமீபத்தில் 3BHK வீடு ஒன்றை வாங்கியுள்ளார் பூஜா. இந்த வீட்டின் விலை ரூ. 6 கோடி என தெரிவிக்கின்றனர்.

கடைசி படத்திற்கு விஜய் வாங்க போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய்
இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு பிரபலம் விஜய். தனது அப்பா மூலம் சினிமாவிற்குள் வந்தாலும் கடின உழைப்பின் மூலம் இப்போது புகழின் உச்சத்தில் உள்ளார்.

இவர் படம் வராத லாபம் பெற மாட்டோமோ என தமிழ் சினிமாவே எதிர்ப்பார்க்கும் நிலையில் தனது 69வது படத்துடன் நடிப்பதை நிறுத்திவிடுவேன் என விஜய் கூறிய செய்தி அனைவருக்குமே ஷாக் கொடுத்துள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார், படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடக்க இருக்கிறது, அதற்காக அண்மையில் விஜய் திருவனந்தபுரம் சென்றார்.

தளபதியின் கோட்டை கேரளாவில் அவருக்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.

அடுத்த படம்
தனது 69வது படம் தான் கடைசி என விஜய் கூறியிருப்பதால் அப்படத்தின் மீது ரசிகர்களுக்கு இப்போதே பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.

அவரின் கடைசி படம் எப்படிபட்ட கதைக்களத்தை கொண்டது, இயக்கப்போவது யார் என நிறைய கேள்விகள் உள்ளன, ஆனால் இதுவரை அதற்கான பதில் வரவில்லை.

இயக்குனர் தேர்வு நடந்துவரும் நிலையில் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த டிவிவ என்ற நிறுவனம் படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது.

தற்போது என்ன தகவல் என்றால், விஜய்யின் கடைசி படமான ‘தளபதி 69’ படத்திற்கு விஜய்க்கு வரி உடன் சேர்ந்து 250 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வடமாகாண சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிரிழப்பு!

கொழும்பு மகரகம புற்று நோய் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த வடமாகாண சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் வடமாகாண சபையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணிபுரிந்து வரும் 2 பிள்ளைகளின் தாயான சுமங்கலா என்பவரே உயிரிழந்துள்ளார்.

புற்று நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு மகரகம புற்று நோய் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் இளம் தாயின் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசிட் விசாவில் பிரித்தானியா செல்வோருக்கு சலுகை

பிரித்தானியாவுக்கு பார்வையாளர் விசா (Visitor Visa) மூலமாக வருபவர்களுக்கு, பிரித்தானியாவில் இருந்தபடியே தமது சொந்த நாட்டில் சில குறிப்பிட்ட வகை பணிகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பார்வையாளர் விசா (Visitor Visa) மூலமாக பிரித்தானியா வருபவர்கள், தங்கள் நாட்டில் விட்டுவந்த அல்லது முடிக்க வேண்டியுள்ள சில பணிகளை (Remote work), பிரித்தானியாவிலிருந்தவண்ணம் தொடர முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது.

சுற்றுலாவுக்காக, குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதற்காக, மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள போன்ற விடயங்களுக்காக பிரித்தானியா வருபவர்கள், சில குறிப்பிட்ட பணிகளை பிரித்தானியாவிலிருந்தவண்ணம் தொடர வழிவகை செய்யபட்டுள்ளது.

பணியைத் தொடர அனுமதி
அதன்படி இந்தச் சலுகையானது, இந்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 31ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவிலிருந்த வண்ணமே சொந்த நாட்டில் பணியைத் தொடர்வதாக இருக்கக்கூடாது என்ற விடயமும் இங்கே கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

அவர்களுடைய முதன்மையான நோக்கம், சுற்றுலாவாகவோ, குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதாகவோ, மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதாகவோ இருந்து, அந்த நேரத்தில் தங்கள் சொந்த நாட்டில் முடிக்கவேண்டிய பணியைத் தொடர்வதாக இருந்தால், அதற்கு அனுமதி உண்டு.

வெளிநாட்டு மோகத்தால் பணத்தை இழக்கும் தமிழர்கள்

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி வடமாகாணத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.

2023ஆம் ஆண்டில் 254 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் 139 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

பண மோசடி

குறித்த மோசடிகள் தொடர்பில் இதுவரை 71 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகவர்களின் மோசடி குறித்து மக்கள் விழிப்படையாத வரை இவ்வாறான மோசடிகளை தடுக்க முடியாது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் சரிவடைந்த தங்கம்!

தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று திங்கட்கிழமை (18) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 658,224 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

இதன்படி , 24 கரட் 1 கிராம் தங்கம் 23,220 ரூபாவாகவும், 22 கரட் 1 கிராம் தங்கம் 21,290 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 20,320 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் , 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 185,750 ரூபாவாகவும் 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 170,300 ரூபாவாகவும், 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 162,550 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

நடிகர் ஆர்யாவா இது எப்படி மாறியுள்ளார் பாருங்கள்

ஆர்யா
நடிகர் ஆர்யா எப்போது பிட்னெஸ் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது இன்ஸ்டா பக்கம் முழுவதும் ஒர்கவுட் போட்டோ மற்றும் வீடியோக்கள் தான் அதிகம் இருக்கும்.

ஜிம் ஒர்கவுட் மட்டுமின்றி நின்ற தூரம் சைக்கிள் பயணம் அடிக்கடி செல்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் ஆர்யா.

ஒரு வருடத்தில் நடந்த மாற்றம்
ஆர்யா தற்போது மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காக கடந்த ஒரு வருடத்தில் தீவிர ஒர்கவுட் செய்து அவர் ஆச்சர்யப்படுத்தும் உடற்கட்டுடன் மாறி இருக்கிறார்.

அந்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கும் ஆர்யா, ‘2023 மார்ச்சில் Mr X படம் உறுதியானது. ஏப்ரல் மாதத்தில் இருந்து நான் இந்த லுக்கிற்காக உடற்பயிற்சி செய்ய தொடங்கினேன். தற்போது ஷூட்டிங் இறுதி கட்டத்தில் இருக்கிறது” என கூறி இருக்கிறார்.

 

இலங்கை சென்றுள்ள நடிகை ராய் லட்சுமி

ராய் லட்சுமி
நடிகர் விக்ராந்த் நடிப்பில் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராய் லட்சுமி.

அதன்பின் குண்டக மண்டக, தர்மபுரி, காஞ்சனா, தாம்தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், தாண்டவம், மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் நடித்துள்ள இவர் அதிக படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆகியிருக்கிறார்.

கடைசியாக தமிழில் 2021ம் ஆண்டு சின்ரல்லா படம் நடித்தார், தி லெஜண்ட் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார்.

இலங்கை பயணம்
அதிக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கிடைக்கும் வெப் சீரியஸ்களில் நடித்து வருகிறார். எதில் இவர் ஆக்டீவாக இருக்கிறாரோ இல்லையோ இன்ஸ்டாவில் புகைப்டபங்கள் பதிவிடுவதில் அதிக ஆக்டீவாக இருக்கிறார்.

அண்மையில் அவர் ஒரு வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார், அதில் அவர் இலங்கைக்கு சென்றுள்ள வீடியோ இடம்பெற்றுள்ளது. அவர் ஒரு கிரிக்கெட் விளையாட்டை காண்பதற்காக இலங்கை சென்றுள்ளாராம்.

இதோ அவர் ஷேர் செய்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

கோவிலுக்கு புதியதாக யானை ஒன்றை பரிசளித்த நடிகை பிரியாமணி

பிரியாமணி
தமிழில் பருத்திவீரன் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் பிரியாமணி.

தமிழ் மட்டும் இல்லை எல்லா நாயகிகளை போல இவரும் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியாகி ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்து ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்போது அடுத்தடுத்து பிரியாமணிக்கு நிறைய பாலிவுட் வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது.

யானை பரிசு
இதுவரை எந்த நாயகியும் செய்யாத ஒரு விஷயமாக நடிகை பிரியாமணி செய்துள்ளார்.

கோவில்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் விதமாக இயந்திர யானைகளை இடம்பெறச் செய்யும் புதிய திட்டத்தை பீட்டா அமைப்பு செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நடிகை பிரியாமணியும் பீட்டாவும் இணைந்து ஒரு இயந்திர யானையை கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள திருக்கயில் மகாதேவா கோவிலுக்கு பரிசாக வழங்கி இருக்கிறார்கள்.

பீட்டா அமைப்புடன் சேர்ந்து இயந்திர யானையை பரிசாக அளிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என பிரியாமணி கூறியுள்ளார். அந்த இயந்திர யானைக்கு மகாதேவன் என்றும் பெயர் வைத்துள்ளனர்.

குடிபோதையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடித்த மாதவன்

நடிகர் மாதவன் தமிழில் அலைபாயுதே படம் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனவர். தமிழ் மட்டுமின்றி அவர் ஹிந்தியிலும் ஏராளமான படங்கள் நடித்து பாலிவுட்டிலும் முக்கிய நடிகராக இருந்து வருகிறார்.

சமீபத்தில் ரிலீஸ் ஆன Shaitaan என்ற ஹிந்தி படத்திலும் நடித்து இருந்தார் மாதவன். அதில் ஜோதிகாவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குடிபோதையில் நடித்த மாதவன்
சமீபத்தில் ஒரு பேட்டியில் மாதவன் தான் குடிபோதையில் ஒரு படத்தில் நடித்தது பற்றி பேசி இருக்கிறார். அமீர் கான் உடன் 3 இடியட்ஸ் படத்தின் ஒரு காட்சியில் தான் அப்படி நடந்ததாம்.

குடித்திருப்பது போல் நடிப்பதற்கு பதில் நிஜத்திலேயே குடித்துவிடலாம் என அமீர் கான் கூறியதால் ஷூட்டிங் தொடங்கும் ஒரு மணி நேரத்திற்கு முன் குடித்துவிட்டார்களாம்.

குடித்துவிட்டு நார்மலாக இருப்பது போல நடிக்க வேண்டும் என நினைத்தாலும், படப்பிடிப்பில் வசனத்தை பேச முடியாமல் மாதவன் தள்ளாடினாராம்.